Breaking News

நாளை அதிகாலை முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் - இராணுவ தளபதி அறிவிப்பு











நாளை (21) அதிகாலை 4 மணி முதல் நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என்று கொரோனா தடுப்பு பணிக்குழு அறிவித்துள்ளது.


 🔹 இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பு பணிக்குழுவின் தலைவர் ராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்தார்.


  🔹நாடு முழுவதும் பயண தடைகள் நாளை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


🔹அதன்படி, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.


🔹இதேவேளை ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த 82 கிராமசேவகர்கள் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments