Breaking News

பெரும் தவறை செய்து விட்டோம் – பசில் உண்மையை ஏற்றுக்கொண்டார்

 

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் தவறுகள் இழைக்கப்பட்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

  இலங்கை வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தவறான தீர்மானங்கள், காலத்துக்கு காலம் சரியான தீர்மானங்களை எடுக்காமை மற்றும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் கட்டமைப்பை விரைவாக உருவாக்கினோம். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்த சென்றோம். அங்குதான் எமது அரசாங்கம் தவறிழைத்துள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments